Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான பான்மசாலா பறிமுதல்
காஞ்சிபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட ரூ 5 லட்சம் மதிப்புள்ள பான்மசாலா, குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் சதாவரம் பகுதியில் பான் மசாலா பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக வந்த ரகசிய தகவல் வந்து.
காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையினர் அவரை கைது செய்து சதாவரம் பகுதியில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஐந்து லட்சம் மதிப்புடைய அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.