/* */

இறந்த காஞ்சி ராணுவ வீரரின் தியாகத்தை போற்றும் வகையில் பிரதமரின் நினைவுப்பரிசு

கடந்த 2020 ஆண்டு உயிர் நீத்த ராணுவ வீரர் ஏகாம்பரத்தின் தியாகத்தை போற்றும் விதமாக அவரது மனைவியிடம் நினைவு பரிசு வழங்கினர்

HIGHLIGHTS

இறந்த காஞ்சி ராணுவ வீரரின் தியாகத்தை போற்றும் வகையில் பிரதமரின் நினைவுப்பரிசு
X

 உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி ஏ.குமாரியிடம் பாரதப்பிரதமர் நரேந்திரமோடி அனுப்பி வைத்த பரிசை வழங்குகிறார் தேசிய மாணவர் படையின் கமாண்டிங் அலுவலர் கர்னல் என்.எஸ்.மெஹரா

சீன எல்லையில் பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் தியாகத்தை மதித்து அவரைப் போற்றும் வகையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அனுப்பியிருந்த நினைவுப்பரிசு அவரது மனைவியிடம் காஞ்சிபுரத்தில் இன்று வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே செம்பரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம்(48). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சீன எல்லையில் பணியாற்றி விட்டு அவரது இருப்பிடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்தார்.இவர் தாய் நாட்டுக்காக செய்த தியாகத்தைப் போற்றும் வகையில் அவரது சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் விதமாக பாரதப்பிரதமர் நரேந்திரமோடி நினைவுப்பரிசு அனுப்பியிருந்தார்.

இப்பரிசினை அவரது மனைவி ஏ.குமாரியிடம் காஞ்சிபுரம் தேசிய மாணவர் படையின் 3வது பிரிவு கமாண்டிங் அலுவலர் கர்னல் என்.எஸ்.மெஹரா வழங்கினார்.இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்க தலைவர் ஜி.ராமசாமி, துணைத் தலைவர் எஸ்.சண்முகம் ஆகியோரும் உடன் இருந்தனர்.


Updated On: 6 Aug 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  2. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  4. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  5. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  6. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  7. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!
  8. தென்காசி
    சிவில் சர்வீஸ் தேர்வில் 851-ஆவது ரேங்க் எடுத்து தென்காசியை சேர்ந்த...
  9. உலகம்
    ஒரு கண்ணில் வெண்ணை! மறு கண்ணில் சுண்ணாம்பு! நெஸ்லேயின் தகிடுதத்தம்
  10. சிங்காநல்லூர்
    அண்ணாமலை பிரச்சார முடிவில் கைவிரலை துண்டித்து கொண்ட பாஜக நிர்வாகி