Begin typing your search above and press return to search.
திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு: சுந்தர் எம்.எல்.ஏ வழங்கல்
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசினை எம்.எல்.ஏ சுந்தர் இன்று வழங்கினார்.
HIGHLIGHTS
உத்திரமேரூர் பகுதியில் உள்ள திருக்கோயில்கள் பணிபுரியும், 40க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பான வேட்டி மற்றும் சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், இன்று இளையனார்வேலூர் பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்து ரத்தினவேல், செயல் அலுவலர்கள் இளங்கோவன், பரந்தாமன் கண்ணன், ஆய்வாளர்கள் ஸ்ரீமதி, திலகவதி மற்றும் ஒன்றிய செயலாளர் குமணன், ஞானசேகரன், மாவட்ட விவசாய அணி தலைவர் சோரனூர் எழுமலை, ஆசூர் கன்னியப்பன், திமுக செயலாளர் கோதண்டன், ஊராட்சி மன்ற தலைவர் கமலக்கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புண்ணியகோட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.