/* */

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைந்தார் பா.ம.க. பிரமுகர்

தமிழக பா.ம.க. துணைத் தலைவராக பணியாற்றி வந்த ஆ.செந்தில்குமார் பா.ஜ.க.வில்அண்ணாமலை முன்னிலையில் இணைந்தார்.

HIGHLIGHTS

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைந்தார் பா.ம.க. பிரமுகர்
X

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைந்த ஆ.செந்தில்குமார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் கீழான பா.ஜ.க. பல போராட்டங்களிலும், ஆளுங்கட்சியை எதிர்த்து செய்யும் அரசியலிலும் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் பிற கட்சிகளில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத்தலைவர் பா.ஜ.க வில் அண்ணாமலை முன்னிலையில் இணைந்துள்ளார். இது காஞ்சிபுரம் பா.ம.க வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆ.செந்தில்குமார் என்னும் பா.ம.க.வின் துணைத் தலைவர் கடந்த 2003ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் நகரில் தொழிற்சங்கத் தலைவராக பா.ம.க வில் தனது அரசியல் வாழ்வை துவங்கினார்.

2005ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட தொழிற்சங்க தலைவராக உயர்ந்தவர்2011ஆம் ஆண்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆனார். பிறகு 2015ஆம் ஆண்டில் மாவட்ட தலைவராக காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையால் நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக பதவி வகித்தார்.2016ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகாலம் பா.ம.க.வில் துணைத்தலைவராக பதவி வகித்தார்.

இவர் பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாபு தலைமையில் இன்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்துள்ளார்.


Updated On: 16 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!