/* */

சிலிண்டருக்கு பட்டை நாமம் போட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்பாட்டம்

பெட்ரோல் டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து, மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சிலிண்டருக்கு பட்டை நாமம் போட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சிலிண்டருக்கு பட்டை நாமம் போட்டு  தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்பாட்டம்
X

காஞ்சிபுரத்தில் வாழ்வுரிமை கட்சியினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்  செய்தனர்.

கடந்த ஒரு மாதமாகவே பெட்ரோல் டீசல் விலை கணிசமாக உயர்ந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு லிட்டர் 100 ரூபாய்க்கு எட்டியது. இதைப்போல் கேஸ் விலையும் கணிசமாக உயர்ந்து நடுத்தர குடும்பத்திற்கு அதிர்ச்சி அளித்தது மத்திய அரசு.

இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே காஞ்சிபுரம் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில துணை பொது செயலாளர் தீனன் தலைமையில் கேஸ் சிலிண்டருக்கு பட்டை நாமம் தீட்டி, ஆட்டோக்களை நிறுத்தி 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வந்து நடுத்தர மக்கள் வாழ்வை காக்க கோரி மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 8 July 2021 4:45 AM GMT

Related News