/* */

காஞ்சிபுரம் அனந்தசரஸ் குளத்தில் தீர்த்தவாரி கண்டருளினார் தேவராஜசாமி

காஞ்சிபுரம் தீர்த்தவாரி உற்சவத்தில் தேவராஜ ஸ்வாமி ஆனந்தசரஸ் குளத்தில் தீர்த்தவாரி கண்டபோது ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அனந்தசரஸ் குளத்தில் தீர்த்தவாரி கண்டருளினார்  தேவராஜசாமி
X

வைகாசி பிரம்மோற்சவ விழாவில் 9ஆம் நாள் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஆனந்த சரஸ் குளத்தில் தீர்த்தவாரி உற்சவத்தில் எழுந்தருளிய எம்பெருமான்.

வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வண்ண மலர்களை சூடி ஸ்ரீதேவி பூதேவியுடன் காஞ்சி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

பிரம்மோற்சவம் முக்கிய விழாக்களான கருட சேவை மற்றும் திருத்தேர் விழாக்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது. இன்று 9ம் நாள் காலை ஸ்ரீ தேவராஜ ஸ்வாமி ஆல் மேல்பல்லக்கில் காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து அருள் பாலித்து மீண்டும் திருக்கோயிலை அடைந்த பின் 12 மணி அளவில் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஆனந்த சரஸ் குளத்தில் எம்பெருமான் தீர்த்தவாரி கண்டார். அப்போது திருக்குளத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி எம்பெருமானை வழிபட்டனர்.

Updated On: 21 May 2022 10:56 AM GMT

Related News