காஞ்சிபுரம் லோக்அதலாத் : 254 வழக்குகளில் ரூ.6.85 கோடிக்கு தீர்வு காணப்பட்டது
காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட நீதிபதி (பொ) எம்.இளங்கோவன் தலைமையில் விசாரணை நடைபெற்றது
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் கூடியது. மாவட்ட நீதிபதி (பொறுப்பு) எம்.இளங்கோவன் தலைமை வகித்து தொடக்கி வைத்து பேசினார்.
சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியுமான கே.எஸ்.கயல்விழி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி, நீதிபதி ஜெ.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர் ஹரிஹரன் வரவேற்றார்.
இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 254 வழக்குகளில் சமரச தீர்வு ஏற்பட்டு இதற்கான எழுப்பிட்டு தொகையாக ரூபாய் ஆறு கோடியே 85 லட்சத்து 30 ஆயிரத்து 252 ரூபாய் வழங்கப்பட்டது.இதில் முக்கிய வழக்காக காஞ்சிபுரத்தில் மின்வாரிய கணக்கீட்டாளராக பணிபுரிந்து வந்தவர் சங்கர் (42). இவர் இருசக்கர வாகனத்தில் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அருகே சென்று கொண்டிருந்த போது பேருந்து மோதியதில் உயிரிழந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக இழப்பீட்டுத் தொகையாக சங்கரின் மனைவி சத்தியவாணியிடம் ரூ.50லட்சத்துக்கன காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி (பொ) எம்.இளங்கோவன் வழங்கினார்.