/* */

காஞ்சிபுரம் கலெக்டர் தலைமையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி!

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் கலெக்டர் தலைமையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி!
X

தேசிய குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி தலைமைரியல் அலுவலர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்ட காட்சி.

வருடந்தோறும் ஜூன் 11ஆம் தேதி தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

இதில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வீட்டு வேலையை ஈடுபடுத்தமாட்டோம் , இரட்டை குழந்தைகளை உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் வேலைக்கு அமர்த்த விடமாட்டோம். குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்புவோம் எனும் உறுதிமொழியும், இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உறுதுணை புரிவோம் எனவும் அனைத்து அலுவலகம் உறுதி மொழி ஏற்றனர்.

Updated On: 11 Jun 2021 10:50 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஆரணி
    ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோவிலில் ராஜசுய யாக வேள்வி
  5. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 1,260 மூட்டை பருத்தி ரூ. 30 லட்சம்...
  6. கலசப்பாக்கம்
    பருவத மலையில் கிரிவலம் வந்த பக்தர்கள்
  7. நாமக்கல்
    முட்டை விலை 30 பைசா சரிவு; கோழிப் பண்ணையாளர்கள் அதிர்ச்சி
  8. நாமக்கல்
    வரும் 27 முதல் ஜூன் 3 வரை நீச்சல் பயிற்சி; விருப்பம் உள்ளவர்களுக்கு...
  9. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு