ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் :அன்னதானம், கண்தானம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் சார்பில் அன்னதானம் , கண்தானம் செய்யப்பட்டது.
HIGHLIGHTS
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், இரும்புப் பெண்மணி , அம்மா என தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஜெ. ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் மற்றும் அமைப்பு செயலாளரும், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , திருவள்ளூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் கணேசன் தலைமையில் காஞ்சிபுரம் உத்திரமேரூர் வாலாஜாபாத் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் திரு உருவப் படத்தை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு வகையான பழங்கள் சமர்ப்பிக்கப்பட்டு தீபம் ஏற்றி நினைவஞ்சலி அனுசரித்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த ஏரிக்கரை பகுதியில் ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் தலைமையிலும் , முன்னாள் டான்சில் தலைவர் ஆர் டி சேகர் தலைமையில் மேட்டு தெருவிலும் , மாவட்ட செயலாளர் சோமசந்தரம் தலைமையில் பேருந்து நிலையம் அருகேயும் , காஞ்சிபுரம் டவுன் வங்கி தலைவர் பாலாஜி தலைமையில் நெல்லுக்காரதெருவிலும், கே எஸ் சோமசுந்தரம் மற்றும் வள்ளிநாயகம் தலைமையில் பெரியார் தூன் அருகே திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி தொண்டர்கள் தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொண்டர்கள் கண்தானம் படிவத்தினை பூர்த்தி செய்து சான்றிதழ்களை பெற்றனர்.
மேலும் நகர செயலாளர் ஸ்டாலின் தலைமையில் தேரடி , வாலாஜாபாத் எம்ஜிஆர் சிலை அருகே கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு அன்னதானம் நடைபெற்றது .
இதேபோல் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.