/* */

அரசு மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

பெருகிவரும் வைரஸ் தொற்றை கட்டுபடுத்த காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை நுழைவு வாயில் , புறநோயாளிகள் பிரிவில் தொடர்ச்சியாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

அரசு மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
X

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிரமாக நடைபெற்று வரும் கிருமிநாசினி தெளிக்கும் பணி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 1ஆம் தேதி 35 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த பத்து தினங்களில் மெல்ல மெல்ல அதிகரித்து காஞ்சிபுரம் மாவட்டத்தின் பாதிப்பு பத்து மடங்காக உயர்ந்துள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த அனைவரும் முகக்கவசம் தனிமனித இடைவெளி மற்றும் அரசு வழிகாட்டு நெறிகளை கடைபிடிக்க மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி காஞ்சி மாவட்ட பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிக்க மாநகராட்சி மற்றும் காவல்துறை வருவாய்த் துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் என வரும் நிலையில் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நுழைவுவாயில், புறநோயாளிகள் பிரிவு பகுதிகளில் தொடர்ச்சியாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கென இரு தொழிலாளர்கள் பணியமர்த்த பட்டுள்ளனர். மேலும் நுழைவுவாயிலில் முடக்கவும் அணிந்த பின்பே காவலர்கள் மருத்துவமனைக்குள் அனுப்பி வைக்கின்றனர்.

Updated On: 11 Jan 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்