/* */

கல்யாணம் நடத்தினா‌.. வளைகாப்புக்கு இலவசம்‌; திருமண மண்டபம் அளித்த ஆஃபர்

காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணமாகும் மணப்பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு இலவசமாக மண்டபம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

கல்யாணம் நடத்தினா‌.. வளைகாப்புக்கு இலவசம்‌;  திருமண மண்டபம் அளித்த ஆஃபர்
X

காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் அள்ளித்துள்ள கட்டண ஆஃபர்.

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே தற்போது விற்கப்படும் பொருட்களுக்கு சலுகைகள் மட்டுமே அதனை வாங்கும் நோக்கம் பொதுமக்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே அமைந்துவிட்டது.

அரசியல் கட்சிகளோ தாங்கள் ஆட்சியைப் பிடிக்க பொது மக்களுக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு உபயோக பொருட்களை இலவசமாக அளிப்போம் என தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்கின்றனர்.

மேலும் வலைதளங்களில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் பொது மக்களுக்கு கவர்ச்சிகரமான கொண்டு வீட்டு உபயோகப் பொருட்களுக்கு சலுகைகளை அறிவித்து விற்பனை செய்து வருகிறது.

இதேபோல் ஆடை நிறுவனங்களும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என பொதுமக்களுக்கு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து விற்பனையில் ஈடுபடுகிறது.

கல்யாண சீர்வரிசை வேண்டுமா அதற்கான காம்போ ஆபர்களும் தற்போது வந்துவிட்டது. புகழ்பெற்ற நிறுவனங்களும் தற்போது பொது மக்களுக்கு ஆபருடன் அளித்தால் மட்டுமே தங்கள் வியாபாரத்தை நிலை நிறுத்த முடியும் என்ற கட்டாயத்தில் இலவசங்களும் ஆஃபர்களையும் அள்ளி வழங்குகின்றனர்.

இதே போல் எங்களிடம் நிலம் வாங்கினால் அதை சில ஆண்டுகள் நாங்களே பராமரித்து தங்களிடம் ஒப்படைப்போம் எனவும் கூறி நிலை விற்பனையும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கும் ஒரு படி மேல் மருத்துவமனைகளும் முழு உடல் பரிசோதனை , மாதாந்திர மருத்துவ பரிசோதனை மற்றும் அவர்களிடையே பெறும் சிகிச்சைகளுக்கும், மருந்துகளுக்கும் ஆஃபர்களை தருகிறது.

இதிலிருந்து விலக்கு பெற்றது திருமணங்கள் மட்டுமே என்ற நிலையில், தற்போது திருமண மண்டபங்களும் இந்த முறையை கையாள இறங்கியது ஒருபக்கம் அதிர்ச்சியும் , மறுபக்கம் திருமண வீட்டாருக்கு மகிழ்ச்சியும் அளித்துள்ளது இந்த திருமண மண்டப நிர்வாகத்தின் ஆஃபர்.

காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது குருவிமலை கிராமம். பாலாற்றின் கரையோரம் மற்றும் அமைதியான சூழலில் பன்னீர் மஹால் திருமண மண்டபம் அமைந்துள்ளது.

தற்போது திருமண வீட்டாரும் அனைத்து வசதிகளான பார்க்கிங் , குளிர்சாதன வசதி , விசாலமான மண்டபம் போக்குவரத்து நெரிலற்ற பகுதி என எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளுடன் இது அமைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இத்திருமண மண்டபத்தை ஒட்டியுள்ள பத்துக்கும் கிராமங்களில் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீட்டு திருமணத்தை நகரினுள் இங்கு நடத்துவார்கள் என திட்டமிடலின் காரணமாக இது அமைக்கப்பட்டுள்ளது .

தற்போது இத் திருமண மண்டபத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதால் வரும் 2023 ஜனவரி 1 முதல் திருமணம் செய்யும் மணமக்களுக்கு பரிசாக மணமகளின் வளைகாப்புக்கு திருமண மண்டப கட்டணம் இலவசம் என அறிவிப்பு செய்துள்ளது.

திருமண மண்டபம் நிகழ்விற்கு ரூபாய் 75 ஆயிரம் கட்டணம் என்ற நிலையில் , வளைகாப்பு நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு ரூபாய் 25 ஆயிரம் கட்டணம் முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும் என அறிவித்து காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்திற்கு முன் பெரிய அளவில் இரு பக்கமும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது அவ்வழியாக செல்வோரை ஒரு நிமிடம் நின்று பார்க்கும் அளவிற்கு உள்ளது.

இன்னும் வரும் காலங்களில் ஆஃபர் என்ற வகையில் பொதுமக்களை கவர்வார்களோ என்ற அச்சமும் பொது மக்களிடம் உள்ளது.

Updated On: 1 Nov 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்