/* */

காஞ்சிபுரத்தில் சேதமடைந்த பாலம் : தடையை மீறும் லாரிகளால் உடையும் ஆபத்து

சேதமடைந்த செய்யாறு பாலத்தில் லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்ட போதிலும், லாரிகள் அத்து மீறி பாலத்தில் செல்கின்றன. இதனால் பாலம் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் சேதமடைந்த பாலம் : தடையை மீறும் லாரிகளால் உடையும் ஆபத்து
X

தடையை மீறி செல்லும் லாரி

கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாகறல் செய்யாறு பாலம் சேதமடைந்து நேற்று வரை பஸ் போக்குவரத்து தடை செய்யபட்டு இருசக்கர வாகனங்கள் , கார் ஆகியவை செல்ல அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் பாலத்தின் மறுபகுதியில் விரிசல்‌ ஏற்பட்டதால் சில தினங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் பாலத்தினை ஆய்வு மேற்கொண்ட பின் இன்று காலை முதல் பொதுமக்கள் சிரமத்தினை கருத்தில் கொண்டு பஸ் போக்குவரத்திற்கு அனுமதியளித்து.

ஆனால் லாரிகள் செல்ல அனுமதியில்லை என நெடுஞ்சாலைத் துறை சார்பாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பதாகையை எந்த ஒரு லாரி உரிமையாளர்களும் கண்டுகொள்ளவில்லை.

இவ்வழியாக சிலிண்டர் லாரிகள், கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் அதிக பார் உஙகளுடன் செல்வதால் விரிசல் ஏற்பட்ட இடத்தில் பாதிப்பு அதிகமாக கூடும் என்பதை அறியாமல் எந்த ஒரு பாதுகாப்பும் நடவடிக்கையும் பாலத்தின் கீழ் மேற்கொள்ளாமல் போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது நெடுஞ்சாலைத்துறை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் லாரிகள் செல்லாதிருக்க வாகனங்களை கண்காணிப்பது நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களா ? அல்லது காவல் துறை அலுவலர்களா ? என கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Updated On: 28 Jan 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  2. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  4. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  5. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  7. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  9. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்