/* */

ஊரடங்கு : விதிமுறைகளை மீறியதாக 126 வழக்குகள் பதிவு - எஸ்.பி எம். சுதாகர்

மாவட்ட முழுவதும் 46 இடங்களில் வாகன சோதனையும், 1100 போலீசார் பாதுகாப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

ஊரடங்கு : விதிமுறைகளை மீறியதாக 126 வழக்குகள் பதிவு - எஸ்.பி எம். சுதாகர்
X

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அறிவித்து உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுப் போக்குவரத்தை நிறுத்தி அனைத்து கடைகளையும் அடைத்து முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்த உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு உத்தரவு காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நாற்பத்தி ஆறு இடங்களில் வாகன சோதனையும் நடைபெற்று வரும் நிலையில் 1100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் நகரில் முக்கிய முக்கிய சாலைகள் ஆன காந்தி சாலை, நெல்லுக்கார தெரு, ராஜ வீதிகள், காமராஜர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு நகர் முழுவதும் வெறிச்சோடிக் கிடக்கிறது.

மாவட்டம் முழுவதும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் வாலாஜாபாத் உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதைத் கண்காணித்து வருகின்றனர். காலை 5 மணி முதல் மாவட்டம் முழுவதும் விதி மீறியதாக நூத்தி இருபத்தி ஆறு வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் தெரிவித்தார்.

Updated On: 9 Jan 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்