/* */

தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
X

ஸ்ரீபெரும்புதூரை சுற்றியுள்ள ஆறு சிப்காட் பகுதியில் இயங்கும் பன்னாட்டு நிறுவன தொழிலாளர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் துவங்கியது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பன்னாட்டு தொழிற்சாலைகளில் தொழில் மீண்டும் சரிவில் தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதில் உற்பத்தியாளர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

தொற்று அதிகரித்தால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை இழக்க நேரிடும். இதை கருத்தில் கொண்டு, தங்கள் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் , இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் உள்ளிட்ட 6 தொழிற்பேட்டையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இதில் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை தயாராகி வருகிறது. சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த முந்தி கொண்டுள்ளன. ஸ்ரீபெரும்புதூரை சுற்றியுள்ள 6 சிப்காட்டில் தோராயமாக 6000 தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தொற்று பரவலை வெகுவாக குறைக்க முடியும். தொழிலாளரையும், தொழிலையும் பாதுகாக்க முடியும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 12 April 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி