/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 18வது மெகா தடுப்பூசி முகாம்

நாளை ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், இன்று 18வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 18வது மெகா தடுப்பூசி முகாம்
X

தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக, சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. தற்போது 15 வயது முதல் 18வயது உடையவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், இன்று தமிழகம் முழுவதும் 18வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் காலை 8 மணி முதல் துவங்கியுள்ளது.

முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கான கால அவகாசம் நிறைவேற்றும் பலர், இரண்டாம் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத நிலையில், இந்த சிறப்பு முகாமில் பயன்படுத்திக் கொள்ளுமாறும், 15 வயது முதல் 18 வயதுடைய இளம் சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இந்த சிறப்பு முகாமினை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறும், உருமாறிய வைரஸ் தாக்கத்தை முற்றிலும் தடுக்க வேண்டுமென்று, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 8 Jan 2022 4:15 AM GMT

Related News