/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 500 இடங்களில் காெராேனா சிறப்பு தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 500 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 500 இடங்களில் காெராேனா சிறப்பு தடுப்பூசி முகாம்
X

பயனாளிக்கு காெராேனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா நோயை தடுப்பதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி தினந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்படுவது மட்டுமல்லாமல் அவ்வப்போது மெகா தடுப்பூசி முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியினை 7 இலட்சத்து 17 ஆயிரத்து 567 பேரும், 3 லட்சத்து 04 ஆயிரத்து 156 நபர்கள் இரண்டாம் தவணையும் இதுவரை செலுத்திக் கொண்டு உள்ளனர். மேலும் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 583 நபர்களுக்கான சிறப்பு முகாம் நாளை மாவட்டம் முழுவதும் 500 இடங்களில் செயல்பட உள்ளது.

இதனை முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தத் தவறிய நபர்கள் விரைவாக செலுத்திக் கொண்டு மற்ற நபர்களுக்கு பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 20 Nov 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை