/* */

காஞ்சிபுரத்தில் சுதந்திர தின அணிவகுப்பு மரியாதையை ஏற்ற ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ரூ1.19 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் சுதந்திர தின அணிவகுப்பு மரியாதையை ஏற்ற ஆட்சியர்
X

தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறை அணி வகுப்பு மரியாதை ஏற்றுகொண்ட மாவட்ட ஆட்சியர்.

நாட்டின் 75வது சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின அமுதப் திருவிழாவை முன்னிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி , காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் முவர்ண பலூனையும், வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் பறக்கவிட்டார்.

அதனைதொடர்ந்து பல்வேறு துறைகளின் கீழ் 52 பயனாளிகளுக்கு 1கோடியே 19 லட்சத்து 92 ஆயிரத்து 239 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். பள்ளி மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டு பாரட்டினார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் சத்தியபிரியா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் Dr சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரையா, திட்ட அலுவலர் ஸ்ரீதேவி , வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Aug 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து