/* */

குற்றங்களை தடுக்க அதிநவீன கேமரா: காஞ்சிபுரம் ஆட்சியர், எஸ்பி ஆய்வு

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் குற்றங்களை தவிர்க்க, 15 லட்சம் மதிப்பில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

குற்றங்களை தடுக்க அதிநவீன கேமரா: காஞ்சிபுரம் ஆட்சியர், எஸ்பி ஆய்வு
X

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் புனரமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தினை ஆய்வு செய்த ஆட்சியர் ஆர்த்தி மற்றும் எஸ்.பி.சுதாகர்.

பட்டு நகரம் கோயில் நகரம் என்று புகழ்பெற்ற காஞ்சிபுரம் நகருக்கு, நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். காஞ்சிபுரம் நகரில் இருந்து பல மாவட்டங்களுக்கும் பொதுமக்கள் செல்ல காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தை நாடுகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குற்றங்களைத் தடுக்கும் வகையில், சிவகாஞ்சி காவல் நிலைய கட்டுப்பாட்டில் பேருந்து நிலையத்தின் மையப் பகுதியில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

மேலும், புறக்காவல் நிலையத்தை பொது விஞ்ஞான வளர்ச்சி கொன்று குற்றங்களை தடுக்கவும் , குற்றவாளிகளை உடனே கைது செய்யும் வகையில் சுமார் 15 லட்சம் மதிப்பில் காவல் நிலையம் புனரமைக்கப்பு, அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகரன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியுடன் பணிகளை ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொண்டனர். பணிகள் நிறைவுற்று உடன் புறக்காவல் நிலையத்தில் காவலர்கள் இருபத்திநான்கு மணிநேரமும் தொடர்பு பணியில் இருப்பார்கள் என கூறப்படுகிறது.

Updated On: 7 Feb 2022 7:45 AM GMT

Related News