/* */

வாலாஜாபாத் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரூ.3 லட்சம் பணம் கொள்ளை

வாலாஜாபாத் அருகே தனியார் தொழிற்சாலை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரூ.3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

வாலாஜாபாத் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரூ.3 லட்சம் பணம் கொள்ளை
X

கொள்ளை நடந்த வீடு.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சேர்க்காடு பகுதியில் தனது மனைவி கலைச்செல்வி மற்றும் மகளுடன் வசித்து வருபவர் தனிகையரசு.

தனிகையரசு ஒரடம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டை பூட்டிவிட்டு செங்கல்பட்டில் நடக்கும் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

திருமண நிகழ்வு நிறைவு பெற்று இன்று காலை 8 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன் கதவு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் வைத்திருந்த சுமார் 25 சவரன் நகை, மற்றும் ரூபாய் 3 லட்சம் பணம் கொள்ளைை போனது தெரியவந்தது.

இதுகுறித்து வாலாஜாபாத் காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டு அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 27 Jun 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  4. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  5. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  6. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  8. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  9. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  10. பொன்னேரி
    திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின்