/* */

வாலாஜாபாத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை

வாலாஜாபாத்தில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டு உடைத்து 60 சவரன் நகையை மர்ம நர்கள் காெள்ளையடித்து சென்றனர்.

HIGHLIGHTS

வாலாஜாபாத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை
X

வீட்டில் உள்ள பீரோ உடைத்துக் கொள்ளையடித்து சென்றுள்ள நிலையில் பொருட்கள் சிதறி கிடக்கும் காட்சி.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட சேர்க்காடு செங்கழுநீர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத், இவரது மனைவி செல்வி, இருவரும் கைத்தறி லுங்கி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் பக்கத்து தெருவில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு விட்டு சம்பத்தும், அவரது மனைவி செல்வியும் வீட்டுக்கு திரும்பி வந்த போது வீட்டினுடைய பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது வீட்டின் அறையிலிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்து 60 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு சோதனை மேற்கொண்டு, கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆதாரங்களை சேகரித்ததை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலிலேயே வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் தங்க நகையும் 3 லட்ச ரூபாய் பணத்தையும், மர்ம நர்கள் திருடிச் சென்றுள்ள நிலையில் மீண்டும் அதே பகுதியில் திருட்டு சம்பவம் நடைபெற்று உள்ளது,அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 30 Jun 2022 1:45 PM GMT

Related News