/* */

சொத்து வரி உயர்வை கண்டித்து காஞ்சி மாவட்ட பாஜக ஆர்ப்பாட்டம்

சொத்துவரி உயர்வை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் பாஜக செய்தி தொடர்பாளர் திருப்பதிநாரயணன் தலைமையில் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

சொத்து வரி உயர்வை கண்டித்து காஞ்சி மாவட்ட பாஜக ஆர்ப்பாட்டம்
X

சொத்து வரி உயர்வை கண்டித்து பாஜக சார்பில் காஞ்சிபுரம் காவலன் கேட் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில், மக்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை கண்டித்து, காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில், மாவட்ட தலைவர் கே எஸ் பாபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணன் கலந்து கொண்டார். மக்களை பாதிக்கும் சொத்து வரியை திரும்பப் பெறக் கோரி கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர்.

நகரக் கட்டமைப்பு மற்றும் சிறந்த சேவைகள் செய்யவே வரிகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுவது உண்மையானால் கூட, அதை மத்திய அரசு கூறிதான் மாநில அரசு செயல்படுவதாக கூறுவது தவறான விஷயம் எனவும், மாநில அரசு விஷயங்களில் ஒருபோதும் பாஜக அரசு தலையிடாது எனவும், ஒவ்வொரு மாநகராட்சியின் வளர்ச்சிக்கும் உறுதுணை புரியும் எனவும் தெரிவித்தார். பொதுமக்களை வஞ்சிக்கும் இந்த சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்ப பெறும் வகையில் மாநில அரசு செயல்படும் வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

Updated On: 8 April 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  2. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  3. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  4. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  5. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  7. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!