/* */

காஞ்சிபுரத்தில் வாகன ஓட்டுநர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் வாகன ஓட்டுநர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

சாலை பாதுகாப்பு குறித்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் பரந்தூர் சாலையில் அமைந்துள்ள வேலம்மாள் போதி பள்ளியில் நேற்று இரண்டு மணி நேரம் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கான சாலை விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வை வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் எடுத்துரைத்து ஏற்படுத்தினார்.

இதில் ஓட்டுநருக்கு வாகன பராமரிப்பு சாலை விதிகள் மற்றும் மாணவர்களை ஏற்றுதல் மற்றும் இறக்குதல் குறித்த பாதுகாப்பு குறித்து காணொளி மூலம் விளக்கத்தில் எடுத்துரைத்தார். இதில் பள்ளி வாகன உதவியாளரும் இடம் பெற்றிருந்தனர்.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பயணம் எவ்வாறு செய்வது என்பது தலைக்கவசம் சாலையை கடப்பது , சாலை விதிகள் குறித்து எடுத்துரைத்தார் இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் , ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Aug 2022 1:21 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்