அண்ணா காவல் பதக்கம் : காஞ்சிபுரம் காவல்துறையில் 3 பேர் தேர்வு
அண்ணா காவல் பதகத்திற்கு காஞ்சிபுரம் எஸ்பி எம்.சுதாகர், ஆயுதப்படை டி.எஸ்.பி முருகன் , கியூ பிரிவு எஸ்.ஐ- உள்பட 3 பேர் தேர்வு
HIGHLIGHTS
தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையில், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததைப் பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான அண்ணா பதக்கங்கள் வழங்கிட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று வெளியிட்டார்.
அதன்படி, காவல் துறையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
1) டாக்டர். எம்.சுதாகர், எஸ்.பி., காஞ்சிபுரம்.
2) சண்முகம், டிஎஸ்பி, ஆயுதப்படை, காஞ்சிபுரம்.
3) சகாயராஜ். கியூ பிரிவு எஸ்ஐ. இவர்கள் மூவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.