/* */

லாரி மீது தொழிற்சாலை பேருந்துமோதல் - 15பேர் காயம்

காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி பகுதியில், டிப்பர் லாரி மீது தொழிற்சாலை பேருந்து மோதியதில், 15 ஊழியர்கள் காயமடைந்தனர்.

HIGHLIGHTS

லாரி மீது தொழிற்சாலை பேருந்துமோதல் - 15பேர் காயம்
X

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் ஃபாக்ஸ்கான் கம்பெனிக்கு, உதிரிபாகங்கள் தயாரித்து சப்ளை செய்யப்படும் தொழிற்சாலைக்கு, இரண்டாவது ஷிப்ட் பணி முடித்துவிட்டு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 தொழிலாளர்கள் தொழிற்சாலை பேருந்தில், சென்னை - பெங்களூரு மார்க்கமாக சென்று கொண்டிருந்னர்.

காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்புறம் தொழிற்சாலை பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 15 ஊழியர்கள் சிறு மற்றும் பெரு காயங்களுடன் அவதிப்பட்டனர்.

அப்பகுதியாக வந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறை மற்றும் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்து அனைவரையும் மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பாலுசெட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 7 Dec 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  4. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  5. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  7. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு
  10. தமிழ்நாடு
    கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!