காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றம்

காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றம்
X

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம்  இன்று மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. 

காஞ்சிபுரம் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகள் உள்ளன. இவை 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை தெரு விளக்கு, பாதாள சாக்கடை, குப்பைகளை கையாளுதல் உள்ளிட்ட சேவைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கான வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளையும் அவ்வப்போது மனுக்களாக பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ் மற்றும் துணை மேயர் குமரகுருநாதன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

கூட்டம் துவங்குவதற்கு முன்பாக சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வளத்தோட்டம் பகுதியில் நடைபெற்ற வெடி விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்பின் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மற்றும் திருக்குறளை மேயர் மகாலட்சுமி யுவராஜ் வாசிக்க அனைத்து உறுப்பினர்களும் உறுதிமொழி ஏற்றனர்.

இதன்பின் இம்மாத கூட்டத்திற்கான 97 தீர்மானங்கள் ஒவ்வொன்றாக அலுவலரால் வாசிக்க அதில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு மாமன்ற உறுப்பினர்களுக்கு மேயர் மகாலட்சுமியுவராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பதில் அளித்தனர் .

மாமன்ற உறுப்பினர்களால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் கொசு தொல்லை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் அதிகளவில் புகார் தெரிவிப்பதாகவும் , அதற்காக விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்த நிலையில் பதில் அளித்த மேயர் சுகாதாரத்துறை தலைவர் பதிலளிக்க கூடிய நிலையில் , மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சங்கர் கூறுகையில் , காஞ்சிபுரம் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பான் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதாகவும், விரைவில் கொள்முதல் செய்யப்பட்டு மாதம் இருமுறை ஒவ்வொரு வார்டுகளிலும் இரண்டு முறை பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் மாமன்ற உறுப்பினர் சண்முகானந்தம் கூறுகையில் , பிள்ளையார் பாளையம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சுமார் 400 மாணவ மாணவிகள் பயின்று வரும் இரு கழிவறைகளை உள்ளதாகவும் இது சுகாதார சீர்கேடு விளைவிக்கும் என்றும் , விரைவாக கூடுதல் கழிப்பறைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

மேலும் சில உறுப்பினர்கள் சாலை வசதி மழை நீர் வடிகால் வசதி உள்ளிட்ட வெயில் கோரிக்கையில் பணி குழு தலைவர் சுரேஷ் கூறுகையில் , காஞ்சிபுரம் மாநகராட்சி தற்போது மார்ச் மாதம் என்பதால் வரி வசூலில் தீவிரமாக இருப்பதாகவும் இப்பணத்தைக் கொண்டு வளர்ச்சி பணிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஏற்கனவே பல்வேறு வகைகள் நமக்கு 30 கோடி ரூபாய் அளவில் பணம் வருவாய் வர தாமதம் ஏற்படுத்துவதாகவும் அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் வைத்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

காந்தி சாலையில் உள்ள தனியார் பட்டு நிறுவனம் வரி செலுத்துவதில் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் கட்டிட உரிமை பெற்றுள்ளதா என்பதை மீண்டும் ஆய்வு செய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

மகளிர் உரிமைத் தொகை குறித்து அ.தி.மு.க. உறுப்பினர் பேசுகையில் தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுவாகவே மாமன்ற கூட்டம் நடைபெறும் நிலையில் மாமன்ற உறுப்பினர்களுக்கு காபி , இனிப்புகள் வழங்குவது வழக்கம். தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் இதனுடன் சேர்த்து தயிர்வடை வழங்கி கோடை வெப்பத்தை தணித்தனர்.

Updated On: 24 March 2023 3:09 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    புதிய டுவிட்டர் கணக்கு தொடங்கிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்...
  2. அவினாசி
    அவிநாசியில் வரும் 3ம் தேதி மின்தடை
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உங்களுக்கு காவல் துறை வாகனங்கள் வேண்டுமா? ஜூன் 8-ம் தேதி பொது ஏலம்
  4. தஞ்சாவூர்
    கொரோனா தொற்றின்போது வேலை இழந்து நாடு திரும்பிய தமிழர்களுக்கு...
  5. சினிமா
    இசையின் ராஜா, இசைஞானி இளையராஜாவிற்கு நாளை 81-வது பிறந்த நாள் விழா
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பிரம்மோற்சவ திருவிழா ஏற்பாடுகளை எஸ்.பி. சுதாகர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    eclampsia meaning in tamil-எக்லாம்ப்சியா என்பது என்ன..? யாருக்கு இது...
  8. சினிமா
    வீரன் படம் எப்படி இருக்கு?
  9. டாக்டர் சார்
    exercise in tamil ஆரோக்யமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அவசியம் :நீங்க...
  10. உசிலம்பட்டி
    சோழவந்தான் அருகே சிவன் கோயிலில் பாலாலயம்