காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30வது மாநாடு
Conference Meeting - காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30வது மாநாடு திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
HIGHLIGHTS
Conference Meeting -தமிழ்நாடு விவசாயிகள் சங்க 30வது மாவட்ட மாநாடு வரும் 8ம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள ஏ.கே.ஜி திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் என். சாரங்கன் தலைமையில் நடைபெறவுள்ளது.
மாநாடு துவக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் உரையாற்றுகிறார்.
இம்மாநாட்டில் விவாதமைடை , புதிய மாவட்ட குழு தேர்வு , தொகுப்புகளை , மாநில மாநாடு பிரதிநிதிகள் தேர்வு என பல பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் , மாநாட்டில் தீர்மானங்கள் பல நிறைவேறவுள்ளதாக மாவட்ட செயலாளர் நேரு தெரிவித்துள்ளார்.
மேலும் மாநாட்டில் சிஐடியு மாவட்ட செயலாளர் முத்துகுமார் , மாநில குழு உறுப்பினர் மோகனன் ஆகியோர்வாழ்த்துரை வழங்கவுள்ளனர்.
மாநாட்டு நிறைவுரையை மாநில செயலாளர் பி.துளசிநாரயணன் நிகழ்த்த மாநாடு நிறைவு பெறுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2