Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் 18 மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ளது. இன்று 498 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட மருத்துவ அறிக்கை தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கொரோனா தொற்று உள்ளதாகவும் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 106 பேருக்கும் செங்கல்பட்டு 46 பேருக்கும் கோயம்புத்தூரில் 48 பேருக்கும் கன்னியாகுமரியில் 28 பேருக்கும் கிருஷ்ணகிரியில் 25பேருக்கும் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 498 நபர்கள் தமிழகம் முழுவதும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியதாகவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 429 பேர் வீடு திரும்பி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.