/* */

வீட்டில் திருடிய வழக்கில் ஒருவர் கைது; தலைமறைவானவருக்கு வலைவீச்சு

ஆதம்பாக்கத்தில், வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

வீட்டில் திருடிய வழக்கில் ஒருவர் கைது;  தலைமறைவானவருக்கு வலைவீச்சு
X

கோப்பு படம் 

சென்னை, ஆதம்பாக்கம், மகாலட்சுமிநகர், 11வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(27). பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான விழுப்புரம் சென்று விட்டு, சென்னை திரும்பினார். அப்போது, அவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்ற பார்த்தபோது, பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு, 2 கிராம் தங்க கம்மல் ஜோடி உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருந்தன.

இது குறித்த அவர் அளித்த புகாரின்பேரில், ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்த மாதவன், 23, வினோத், 19 ஆகியோர் திருடியது தெரியவந்தது. மாதவனை பிடித்த போலீசார், அவரிடம் இருந்து திருடப்பட்ட நகையை மீட்டனர். அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள வினோத்தை தேடி வருகின்றனர்.

Updated On: 20 Jan 2022 8:32 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்