/* */

ஊரக உள்ளாட்சி தேர்தல்: உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 10வது வார்டில் 4 முனை போட்டி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 10வது வார்டில் 4 முனை போட்டி நிலவி வருகிறது.

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சி தேர்தல்: உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 10வது வார்டில் 4 முனை போட்டி
X

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பழனிவேல் - திராவிட முன்னேற்றக் கழகம், பழனிவேல்- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், சாமிதுரை - தேசிய முற்போக்கு திராவிட கழகம், ராமர் - நாம் தமிழர் கட்சி, அஞ்சாமணி - சுயேட்சை ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் 4 வேட்பாளர்களும் கிராமம் கிராமாக தங்களுக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

Updated On: 3 Oct 2021 4:04 PM GMT

Related News