Begin typing your search above and press return to search.
சுகாதார சீர்கேடு நிறைந்த சாலைகள்: நோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள்
போக்குவரத்துக்கு லாயக்கற்ற அபாயகரமான சாலை, சுகாதார சீர்கேடுகளுடன் நோய் பரப்பும் அச்சம்.
HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ளது இருந்தை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மாதா கோவில் தெருவில் கழிவுநீர் சாக்கடை போல தேங்கி காட்சி அளிக்கிறது.
நோய் தொற்று பரவிக் கொண்டிருக்கும் சமயத்தில் இப்படி சாக்கடை நீர் தெருவில் தேங்கியுள்ளது. இந்த சுகாதார சீர்கேடு டெங்கு, மலேரியா போன்ற நோய்களை பரப்பும் என்று பொதுமக்கள் அச்சப் படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.