/* */

உளுந்தூர்பேட்டை அருகே மது பாட்டில் கடத்தல்; அரசு பேருந்து நடத்துனர் கைது

பெங்களூரில் இருந்து மினி வேனில்மது பாட்டில்களை கடத்தி வந்த, பேருந்து நடத்துனர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டை அருகே மது பாட்டில் கடத்தல்; அரசு பேருந்து நடத்துனர் கைது
X

மாதிரி படம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், எல்லை கிராமம் ஏரி பகுதியில், போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி வேனை நிறுத்தி, சோதனை செய்தபோது அதில், 670 மது பாட்டில்கள் இருந்தன.

உளுந்துார்பேட்டை அடுத்த நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன், சக்திவேல் ஆகியோர் பெங்களூரில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

பாஸ்கரன், திருக்கோவிலுார் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிகிறார். போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர். மது பாட்டில்கள், மினி வேனை பறிமுதல் செய்தனர்.

Updated On: 26 May 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ரூ.5.48 கோடி பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை
  2. டாக்டர் சார்
    கரு உள்வைப்பு என்றால் என்ன? வாங்க தெரிந்து கொள்வோம்!
  3. கல்வி
    எளிய குறள் அறிவோம் எல்லோரும் வாங்க..!
  4. பூந்தமல்லி
    காங்கிரஸ் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
  5. தமிழ்நாடு
    தபால் ஒட்டுகள் இன்றுடன் நிறைவு..!
  6. நாமக்கல்
    மக்களுக்காக இலவச போர்வெல் அமைத்து கொடுப்பேன் : அதிமுக வேட்பாளர்...
  7. ஆன்மீகம்
    வராக அவதாரத்தின் அற்புதத்தை பார்க்கலாம்..!
  8. சினிமா
    சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த சில பிரபல நடிகைகள்
  9. அரசியல்
    கோவையில் நடந்த பிரஸ்மீட்: தேர்தல் அதிகாரி எச்சரிக்கை..!
  10. அரசியல்
    எம்ஜிஆர் கனவை நிறைவேற்ற அம்பையில் மோடி உறுதி..!