சங்கராபுரம் பேரூராட்சியில் துணைத்தலைவர் தேர்தல் தள்ளிவைப்பு

சங்கராபுரம் பேரூராட்சியில் துணைத்தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சங்கராபுரம் பேரூராட்சியில் துணைத்தலைவர் தேர்தல் தள்ளிவைப்பு
X

சங்கராபுரம் பேரூராட்சி.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள உள்ள நிலையில் திமுக 9 இடங்களையும் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் திமுக சார்பில் பேரூராட்சி தலைவராக 13வது வார்டு கவுன்சிலராக ரோஜா ரமணியையும், துணைத்தலைவராக இந்திய காங்கிரஸ் கட்சி சார்ந்த ஆஷாபி ஆகியவர்களையும் வேட்பாளர்களாக திமுக தலைமை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் திமுகவைச் சார்ந்த சங்கராபுரம் நகர பொறுப்பாளர் தாகப்பிள்ளையின் துணைவியார் தா.ரோஜா ரமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

மேலும் திமுக தலைமை கழகம் அறிவிப்பின்படி காங்கிரஸ் கட்சியை சார்ந்த 5-ஆவது வார்டு கவுன்சிலர் ஊராட்சி துணைத்தலைவர் பதவி கிடைக்கும் என்று காத்திருந்த நிலையில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து மறைமுக தேர்தலுக்கு வாக்களிக்க யாரும் வராததால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக சங்கராபுரம் பேரூராட்சியின் செயல் அலுவலர் சம்பத்குமார் தகவல் பலகையில் அறிவிப்பு செய்தார்.

இதனால் சங்கராபுரம் பகுதியில் கூட்டணி தர்மத்தை திமுக மீறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் இடையே மிகுந்த அதிர்ச்சியும் ஏமாற்றமும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.

Updated On: 5 March 2022 2:54 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா