சங்கராபுரத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் நடைபெற்றது
சங்கராபுரத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவி வழங்கும் விழா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது
HIGHLIGHTS
சங்கராபுரத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் கிரண் குராலா தலைமை தாங்கினார்.
கவுதம சிகாமணி எம்.பி., உதயசூரியன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். விழாவில், வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை, பட்டா மாற்றம், வாரிசு சான்றிதழ் மற்றும் பசுமை வீடு உட்பட 25 பயனாளிகளுக்கு 27 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், 'முதல்வர் தேர்தலுக்கு முன் உங்களிடம் மனுக்களைப் பெற்று அந்த மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆட்சிக்கு வந்து 30 நாட்களுக்குள் பெறப்பட்ட மனுக்கள் மீது முதல் தவணையாக இன்று 25 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டுள்ளது. இன்னும் 70 நாட்களில் மீதமுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்' என்றார்.
விழாவில், தாசில்தார் சையத் காதர், பி.டி.ஓ.,க்கள் செல்லதுரை, ரவிச்சந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நகர செயலாளர் துரை உட்பட பலர் பங்கேற்றனர்.