/* */

மணலூர்பேட்டை அருகே மதுபாட்டில்கள் கடத்தல்- 3 பேர் கைது

மணலூர்பேட்டை அருகே பெங்களூருவில் இருந்து மினி லாரியில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

மணலூர்பேட்டை அருகே மதுபாட்டில்கள் கடத்தல்- 3 பேர் கைது
X

மணலூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர்கள் அகிலன் மற்றும் செல்வம், தலைமை காவலர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் முருகக்கம்பாடி கிராமத்தில் உள்ள சோதனைசாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் பெங்களூருவில் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 100 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக சங்கராபுரம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அசோக், விளந்தையை சேர்ந்த சதீஷ், டிரைவர் தினகரன் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் மினி லாரியுடன் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மினி லாரி உரிமையாளர் ஜெயராமன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 3 Jun 2021 5:37 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  2. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  3. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  5. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  6. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!
  7. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  8. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
  9. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...
  10. இந்தியா
    மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?