Begin typing your search above and press return to search.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக பெ.புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக திமுகவை சேர்ந்த பெ.புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த ஊராக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களாக போட்டியிட்ட 19 இடங்களிலும் திமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என் ஸ்ரீதர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் 13வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவை சேர்ந்த பெ.புவனேஸ்வரி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வாழ்த்து தெரிவித்தார்.