Begin typing your search above and press return to search.
கடன் தொல்லையால் பட்டதாரி இளைஞர் தற்கொலை
பெரியக்கொள்ளியூரில், கடன் தொல்லையால் மனமுடைந்த இளைஞர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த பெரியக்கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் மகன் ஆனந்த்,23; பி.பி.ஏ., பட்டதாரி. இவர் கோயம்புத்துாரில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் வேலையை விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வேறுவேலை கிடைக்காமல் வீட்டிலேயே இருந்ததால், வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடன் தொல்லை அதிகமானதால் மனமுடைந்த ஆனந்த், அதே பகுதியில் விளைநிலத்தில் உள்ள வேப்பமரத்தில் மதியம் 12.45 மணியளவில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பகண்டை கூட்ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆனந்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.