Begin typing your search above and press return to search.
கள்ளக்குறிச்சியில் ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கல்
கள்ளக்குறிச்சியில் ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவியை, அமைச்சர் ஏ.வ. வேலு வழங்கினார்.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் திருமங்கலத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கு நிகழ்வு நடைபெற்றது. இதில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பங்கேற்று, நிதியுதவியை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என். ஸ்ரீதர் தலைமை வகித்தார். சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் கா.கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிகண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.