Begin typing your search above and press return to search.
உளுந்தூர்பேட்டை அருகே இடிந்து விழும் நிலையில், பள்ளி கட்டிட மேற்கூரை
உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அரசுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட உ.செல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிட சுவர்கள் மற்றும் மேற்கூரை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
எனவே இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளதால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித் துறை அமைச்சரையும் தமிழக அரசையும் உ.செல்லூர் பொது மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.