/* */

இருளர் குடியிருப்பு பகுதியில் இன்று சூரியசக்தி மின் விளக்கு துவக்கம்

ரோட்டரி சங்கத்தின் சார்பில் இருளர் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட சூரியசக்தி மின் விளக்கு துவக்க விழா இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

இருளர் குடியிருப்பு பகுதியில் இன்று சூரியசக்தி மின் விளக்கு துவக்கம்
X

இருளர் குடியிருப்பு பகுதியில் சூரியசக்கி மின் விளக்கை தொடங்கி வைத்த கோட்டாட்சியர் சாய்வர்தினி.

உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரூ.10 ஆயிரம் மதிப்பீட்டில் இருளர் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட சூரிய சக்தி மின் விளக்கு துவக்க விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் ரோட்டரி சங்கத்தின் மாவட்ட தலைவர் வின்சென்ட், விழுப்புரம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் சிவகுமார் மற்றும் சிறப்பு திட்ட தலைவர்கள் வெங்கடாஜலபதி, தெய்வீகன், ஜெய் சிங், மோகன்ராஜ் முத்துகுமாரசாமி, செல்வ போதகர் முன்னாள் கவுன்சிலர் சிவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்தினி அவர்கள் கலந்து கொண்டு சூரிய மின்சக்தி விளக்கு திட்டத்தை துவக்கிவைத்து, இருளர் குடியிருப்பு வாசிகளுக்கு ரூபாய் 5000 மதிப்பிலான உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். இதில் இருளர் குடியிருப்புவாசி பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Oct 2021 1:02 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?