/* */

தெருவில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருநாவலூர் அருகே கிழக்கு மருதூர் தெருவில் தேங்கிய நீரால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

HIGHLIGHTS

தெருவில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
X

கிழக்கு மருதூர் 5வார்டு தெருவில் தேங்கிய மழைநீர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஒன்றியம், கிழக்கு மருதூர் 5வது வார்டில் உள்ள தெருவில் 20 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு மழைகாலங்களில் தேங்கும் தண்ணீரால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பெய்த மழையால் தெரு முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அங்கு வசிப்பவர்கள் கடந்து செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தெருவில் வசிப்பவர்கள் கூறுகையில், எங்கள் தெருவில் இருப்பவர்கள் சுமார் 4 வருடங்களாக இந்த வழியாக செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். இதனை ஊராட்சி நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. எனவே இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும்.

நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், 5 வார்டில் உள்ள மக்கள் அனைவரும் வரும் 4.10.2021 அன்று ஓட்டு போட செல்லமாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 24 Sep 2021 10:09 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்