கள்ளக்குறிச்சியில் ஆட்டோ டிரைவர்களுடன் போலீசார் ஆலோசனை

கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆட்டோ டிரைவர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கள்ளக்குறிச்சியில் ஆட்டோ டிரைவர்களுடன் போலீசார் ஆலோசனை
X

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆட்டோ டிரைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம். 

கள்ளக்குறிச்சியில் காவல்துறை சார்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது தொடர்பாக ஆட்டோ டிரைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு டி.எஸ்.பி., ராஜலட்சுமி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் பாரதி வரவேற்றார்.

கூட்டத்தில், சில குற்றசெயல்களில் சம்மந்தப்பட்ட நபர்களை பிடிப்பதிலும், அவசர தேவைக்கு உதவுவதிலும் காவல்துறைக்கு ஆட்டோ டிரைவர்கள் உதவி செய்கின்றனர். தற்போது நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதிலும் உங்களது பங்கு இருக்க வேண்டும்.

ஆட்டோவில் அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது. நகரில் சாலைகளில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றக் கூடாது. ஸ்டாண்டுகளில் மட்டுமே நிறுத்தி ஏற்ற வேண்டும்.போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என டி.எஸ்.பி., ராஜலட்சுமி அறிவுறுத்தினார்.

சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தண்டபாணி, மாவட்ட ஆட்டோ சங்கத் தலைவர் செல்வம், செயலாளர் வேலுமணி, பொருளாளர் சையத்சர்தார், நகர தலைமை ஆட்டோ சங்க தலைவர் மணிகண்டன் உட்பட அனைத்து ஆட்டோ சங்க நிர்வாகிகள், போலீசார் பங்கேற்றனர்.

Updated On: 26 Dec 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிக்கு, ஆக்கிரமிப்பை அகற்ற...
  2. டாக்டர் சார்
    cipco pharmaceuticals தொற்று நோய்களை எதிர்த்துப் போராட சிப்கோ வைரஸ்...
  3. சேலம்
    “ஏற்காடு எங்கள் பெருமை” விழிப்புணர்வு நடைப்பயணம்: எம்எல்ஏ, ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    Betrayal quotes in tamil-துரோகித்து வெல்வதைவிட நேர்மையாக தோற்பது...
  5. தமிழ்நாடு
    mavattam in tamilnadu தமிழக மாவட்டங்களின் சிறப்பு பற்றி தெரியுமா...
  6. ஈரோடு
    பண்ணாரி அம்மன் கோவில் அருகே சுற்றித்திரிந்த காட்டு யானையால் பீதி
  7. ஈரோடு
    காஞ்சிக்கோவில், மயிலம்பாடி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
  8. லைஃப்ஸ்டைல்
    Mulam in tamil-'சாண் ஏறுனா முழம் சறுக்குது' இதில் முழம் என்பது என்ன?...
  9. இந்தியா
    ரயில் விபத்துகளில் உயிரிழந்தோரின் நிவாரணத்தொகை உயர்வு
  10. தமிழ்நாடு
    இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை:முதல்வர் ...