/* */

திருநாவலூர் அரசு பள்ளி அருகே குப்பை கழிவுகள்: ஊராட்சி நிர்வாகம் அகற்றம்

திருநாவலூர் அரசு பள்ளி அருகே குப்பை கழிவுகளால் மக்கள் அவதியுற்ற நிலையில் ஊராட்சி நிர்வாகம் அகற்றியது.

HIGHLIGHTS

திருநாவலூர் அரசு பள்ளி அருகே குப்பை கழிவுகள்: ஊராட்சி நிர்வாகம் அகற்றம்
X

சாலையோரமாக கொட்டப்பட்டிருந்த கோழி இறைச்சிக் கழிவுகளை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகற்றும் ஊராட்சி நிர்வாகம். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் சாலையோரமாக கொட்டப்பட்டிருந்த கோழி இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பையினால் துர்நாற்றம் வீசியது.

இதனால் பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் சாலையோரம் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையறிந்த திருநாவலூர் ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு காசிநாதன், ஜே.சி.பி இயந்திரம் மூலம் குப்பை கழிவுகளை அகற்றினார்.

இதனையடுத்து குப்பை கழிவுகளை அகற்றிய ஊராட்சி தலைவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Updated On: 29 Nov 2021 12:50 PM GMT

Related News