Begin typing your search above and press return to search.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு கலெக்டர் தலைமையில் ஏற்கப்பட்டது.
HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்றார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்,தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் உறுதி மொழி படிவத்தை வாசிக்க அதனை அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் திரும்ப படித்து உறுதி எடுத்துக்கொண்டனர்.