/* */

கள்ளக்குறிச்சியில் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சியில் பள்ளி வாகனங்களை இயக்கி, பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சியில் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு
X

கலெக்டர் ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி : பள்ளி வாகனங்களை இயக்கி, பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்துார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது.

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி வளாகத்தில் கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் நடந்த பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாமில் 76 பஸ்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. வாகனங்கில் அவசர கால கதவு, முதலுதவி பெட்டகம், தீயணைப்பு கருவி, வாகனத்தின் தரைத்தளம், புவியிடங்காட்டி, கண்காணிப்பு கேமரா, பிரேக், கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து வாகனத்தை இயக்கி கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

வாகன ஓட்டுநர்களுக்கு அவசர காலங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வட்டார போக்குவரத்து அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.

உளுந்துார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் உளுந்துார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பள்ளி வாகன ஆய்வு முகாம் நடந்தது. இதில் 32 வாகனங்கள் ஆய்வ செய்யப்பட்டது. டி.இ.ஓ., சிவராமன், ஆர்.டி.ஓ., சாய்வர்த்தினி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஜெயபாஸ்கரன், செந்துார்வேல், டி.எஸ்.பி.,க்கள் ராஜலட்சுமி, மணிமொழியன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கள்ளக்குறிச்சி செல்வம், உளுந்தூர்பேட்டை பெரியசாமி, உடனிருந்தனர்.

Updated On: 24 Nov 2021 12:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  2. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  3. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  5. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  6. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  9. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  10. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?