/* */

தமிழருக்காக சொத்து விற்று தனது குடும்பத்தை தவிக்க விட்ட பென்னிகுவிக்

சொத்துகளை விற்று, தனது குடும்பத்தை வறுமையில் தள்ளி, தமிழர்களை வாழ வைத்த கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாளான இன்று, அவரை தமிழர்கள் நினைவு கூர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

HIGHLIGHTS

தமிழருக்காக சொத்து விற்று தனது குடும்பத்தை தவிக்க விட்ட பென்னிகுவிக்
X

கர்னல் பென்னிகுவிக்

முல்லை பெரியாறு அணை கட்டுவதற்காக தனது சொத்துக்களை செலவிட்டு விட்டு, தனது சொந்த குடும்ப வறுமை நிலையில் இருந்தும் தமிழர் நலனை பற்றியே சிந்தித்த, தியாகி கர்னல் பென்னிகுவிக் பிறந்தநாள் இன்று . அதனால் தான் அவரை, மனித கடவுளாக வணங்குகிறோம் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள் கூறியதாவது: கடந்த 1876ம் ஆண்டு முதல் 78ம் ஆண்டு வரை மதராஸ் மாகாணம் பெரும் பஞ்சத்தில் சிக்கியது. பல லட்சம் மக்கள் பஞ்சத்தில் இறந்தனர். பருவமழை இல்லாமல் தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அப்போது கடல் மட்டத்தில் இருந்து 2890 அடி உயரத்தில் அரபிக்கடலை நோக்கி சென்று கொண்டிருந்த முல்லை பெரியாறை அணை கட்டி, தடுத்து நிறுத்தி, மலையை குடைந்து நீர்வழிப்பாதை அமைத்து, தண்ணீரை தேனி மாவட்டத்தின் பக்கம் திருப்பினார், ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்.

சுருக்கி, போர்ட்லாண்ட் சிமெண்ட் கலந்து 'எடை ஈர்ப்பு அணை' தத்துவத்தின் கீழ் இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணை கட்டப்படும் போது, 483 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இந்த அணை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கர்னல் ஜான் பென்னிகுவிக், பிரிட்டனில் இருந்த தனது சொத்துக்களை விற்று அந்த பணத்தை அணை கட்டுமான பணிகளுக்கு செலவிட்டார்.

இவரது துணைவியார் கிரேஸ்ஜார்ஜியானா. இவர்களுக்கு ஐந்து பெண்கள், ஒரு ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்த அணை கட்ட மொத்தம் 75 லட்சம் ரூபாய் செலவானது. இந்த அணை கட்ட பிரிட்டனில் இருந்த தனது சொத்துக்களை கர்னல்ஜான் பென்னிகுவிக் விற்றதால், இவரது குடும்பம் வறுமையில் வாடியது. இவர் பெற்ற மூன்று பெண்களுக்கு திருமணம் கூட செய்து வைக்க வழியில்லாமல், அவர்கள் மணம் முடிக்காமலேயே மரணித்தனர். அவருடைய ஒரே மகனும் பிழைப்பிற்காக ஜெர்மன் சென்று, அங்கு ஜெர்மானிய பெண்ணை திருமணம் செய்து வாழ்க்கையை கழித்திருக்கிறார்.

அணை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் மீசை வைத்திருந்தனர். இதனால் கர்னல் ஜான் பென்னிகுவிக் தானும் மீசை வளர்த்துக் கொண்டார். கடும் போராட்டத்திற்கு பின்னர், அணை கட்டிய பென்னிகுவிக் 1895ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தார். இப்படி தனது குடும்பத்தையே வறுமையில் தள்ளி தமிழர்களுக்கு வாழ்வு கொடுத்ததால் தான், அவரது உருவ படத்தை தமிழர்கள் வீடு தோறும் வைத்து, வாழ்ந்த மனித கடவுளாகவே வழிபட்டு வருகின்றனர். ஜனவரி 15ம் தேதி அவரது பிறந்தநாளில் அவரின் செயல்களை நினைவு கூர்ந்து அவருக்கு நன்றி தெரிவிப்பதை கடமயைாகவே கொண்டுள்ளோம். இவ்வாறு கூறினர்.

Updated On: 15 Jan 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?