/* */

கிருஷ்ணகிரியில் நகைக் கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கிருஷ்ணகிரியில் நகைக் கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் நகைக் கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
X

நகைக் கடை உரிமையாளரான சுரேஷ்.

கிருஷ்ணகிரியில் பிரபல தனியார் நகைக் கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியில் பிரபல தனியார் நகைக் கடை உரிமையாளரான சுரேஷ், கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவராக பதவி வகித்து வந்தவர்.

இவர் காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை காலை 7.15 மணியளவில் தனது கழுத்துப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை சம்பவம் குறித்த தகவல் வியாபாரிகளிடையே பரவியதால், அங்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவரது வீட்டின் முன் குவிந்துள்ளனர்.

உயிரிழந்த சுரேசுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கிருஷ்ணகிரி நகரில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

Updated On: 14 Oct 2023 7:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு