/* */

ஷாக் கொடுக்கும் மல்லி.. ஒரு கிலோ ரூ.5000.. விவசாயிகளுக்கு ஜாக்பாட்

திண்டுக்கல் மற்றும் தேனியில் பூக்களின் வரத்து குறைவால் மல்லிகைப்பூ விலை உச்சத்தை தொட்டுள்ளது.

HIGHLIGHTS

ஷாக் கொடுக்கும் மல்லி.. ஒரு கிலோ ரூ.5000.. விவசாயிகளுக்கு ஜாக்பாட்
X

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் தற்போது விளைச்சல் இன்றி வரத்து குறைந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக ரூ.1,500க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ தற்போது ரூ.5,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் தற்போது கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. தினமும் மாலை 5 மணிக்கு தொடங்கி காலை 9 மணி வரையிலும் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. மேலும் பருவமழை பெய்ய வேண்டிய காலத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவது விவசாயத்தை கடுமையாக பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகிறது. இதனால் மல்லிகைப்பூக்களின் விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பூக்களின் பனிப்பொழிவால் மொட்டுக்கள் செடியிலேயே கருகி விடுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கேரள எல்லைப்பகுதியான தேனி மாவட்டம் இரு மாநிலங்களையும் இணைக்கும் பகுதியாக உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட்டுகளிலிருந்து அதிகமாக கேரள மாநிலத்தில் உள்ள குமுளி, கட்டப்பனை, வண்டிபெரியார் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் பூக்கள் ஏற்றுமதியாகிறது.

தேனி மாவட்டத்தின் ஆண்டிபட்டி , கம்பம், சீலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் கடந்த சில மாத காலமாக பூக்களின் விலை மந்தமாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது பூக்கள் வரத்து குறைவதன் காரணமாகவும், சபரிமலை சீசன், வளர்பிறை கடைசி முகூர்த்தம் மற்றும் கார்த்திகை போன்ற விஷேச நாட்களையோட்டி பூக்களின் விலை கடும் உச்சத்தை தொட்டுள்ளது. குறிப்பாக தேனி, ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டுகளில் மல்லிகை பூவின் விலை இன்று கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி மலர் சந்தையில் மல்லிகைப்பூ வரத்து அடியோடு குறைந்துள்ளது. இங்கு ஒருநாளைக்கு சராசரியாக 2 ஆயிரம் கிலோ என்ற அளவில் இருந்த மல்லிகைப்பூக்களின் வரத்து, தற்போது 10 கிலோவாக குறைந்துள்ளது. இதனால், மல்லிகைப்பூவின் விலை சட்டென உயர்ந்துள்ளது. ஆண்டிப்பட்டி பூமார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3,500-லிருந்து ரூ.4,000த்திற்கு விற்பனை செய்யப்பட்டதும், இன்று கிலோவிற்கு ரூ.5,000 வரையில் விற்பனைவாதும், முகூர்த்த நாள் வர உள்ள நிலையில் மல்லிகைப்பூ விலை மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மல்லிகைப்பூவை போல பிச்சி மற்றும் முல்லைப்பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்திலும் மல்லிகை பூவின் விலை கிலோ ரூ.5,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. மதுரை மல்லி விலை ரூ.3000 முதல் 3500, பிச்சிப்பூ ரூ.1,500, முல்லை ரூ.1500, சம்மங்கி ரூ.300, செண்டு மல்லி ரூ.80 , பட்டன் ரோஸ் ரூ.250 வரையிலும் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 3 Dec 2022 7:52 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!