/* */

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஐஐடி மெட்ராஸ் உருவாக்கிய 'தகவல் தொழில்நுட்பக் கருவி'

ஆந்திரப்பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பட்டியல் இனத்தவரின் (SC) ஆரோக்கியத்தை மேம்படுத்திவருகிறது

HIGHLIGHTS

ஆரோக்கியத்தை மேம்படுத்தும்  ஐஐடி மெட்ராஸ் உருவாக்கிய தகவல் தொழில்நுட்பக் கருவி
X

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் பகஜா மற்றும் புலிசேர்லா மண்டல்களில் இ.பாலகுட்டப்பள்ளி எஸ்சி மற்றும் அதனை ஒட்டி குக்கிராமங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.

ஐஐடி மெட்ராஸ் 'தகவல் தொழில்நுட்பக் கருவி' (IT Tool) ஒன்றை உருவாக்கி ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பட்டியல் இனத்தவரின் (SC) ஆரோக்கியத்தை மேம்படுத்திவருகிறது

ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் கிராமப்புற பட்டியலின (Scheduled Caste) மக்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும் மேம்படுத்தவும் தகவல் தொழில்நுட்பக் கருவி (IT Tool) ஒன்றை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) உருவாக்கி உள்ளது. ஓபன் சோர்ஸ் மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஐடி கருவி (IT Tool) விரிவான குடும்ப அளவிலான வருடாந்திர ஆரோக்கியம் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டது.

மருத்துவ சிகிச்சை மற்றும் முன்னுரிமை சுகாதாரப் பிரச்னைகளில் உணவு ஆலோசனையின் தாக்கம் ஆகியவை குறித்து புறநிலை மதிப்பீடு செய்வதற்காக இந்த 'ஐடி டூல்' பயன்படுத்தப்பட்டது. சிகிச்சையின் செயல்திறன் மற்றும் செலவுகளின் அடிப்படையில் உகந்த கிராமப்புற சுகாதாரத் திட்டம் ஒன்றை உருவாக்க இது வழிவகுக்கும்.

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் பகஜா மற்றும் புலிசேர்லா மண்டல்களில் இ.பாலகுட்டப்பள்ளி எஸ்சி மற்றும் அதனை ஒட்டி குக்கிராமங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. வீட்டிற்கு 5 அல்லது 6 பேர் என சுமார் நூறு பட்டியலின குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றன.

கடந்த காலங்களில் இங்குள்ள மக்கள் கேழ்வரகு மற்றும் தினை வகைகள், பால் பொருட்கள், மீன் போன்ற நீர்வாழ் இறைச்சியை உணவாகக் கொண்டிருந்தனர். எஸ்.வி. ஆயுர்வேதா கல்லூரியின் ஹர்நாத் சாரி, டாக்டர் ஞான பிரசூனாம்பா ஆகியோரைக் கொண்ட மருத்துவர் குழுவினர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கிராமங்களுக்குச் சென்று இந்தத் திட்டத்தைத் திறம்பட செயல்படுத்த உதவினார்கள்.

வறுமை காரணமாக பருப்பு, பால் பொருட்கள், இறைச்சி உள்ளிட்டவை ஏதுமின்றி வறண்டுபோன, மோசமான உணவை இங்குள்ள மக்கள் தற்போது உட்கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக பெண்கள், குழந்தைகள் ரத்தசோகையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நிபுணத்துவம் பெற்ற சுகாதாரப் பயிற்சியாளர்கள் இந்த அறிகுறிகளைக் கண்டறிந்து உரிய உணவு ஆலோசனைகளை வழங்கினர். அவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஐஐடி மெட்ராஸ்-ன் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன. ஒரு மாதம் விட்டு மறுமாதம் காணொலி வாயிலாக நேரடிக் கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பு விரிவுரைகள் வழங்கப்பட்டன.

இத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து எடுத்துரைத்த சென்னை ஐஐடி-யின் அப்ளைடு மெக்கானிக்ஸ் துறையின் பேராசிரியர் சி.லட்சுமண ராவ் கூறும்போது, "சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்ட கிராமங்களில், ஐடி டூல்ஸ்-களைக் கொண்டு சுகாதார நிலை மற்றும் உடல்நலத்திற்கான செலவினங்கள் ஆகியவை குறித்த விரிவான அடிப்படைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. மருத்துவ சிகிச்சை அளித்தல் உணவு ஆலோசனை வழங்குதல் மற்றும் அவற்றைக் கண்காணித்தல் ஆகியவற்றுக்கு ஐடி டூல்ஸ்-கள் பயன்படுத்தப்பட்டன. அங்குள்ள மக்களின் சுகாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்குப் பின்னரும் ஐடி டூல்ஸ்-களைக் கொண்டு கணக்கெடுப்பு, உடல்நிலை மற்றும் செலவினங்கள் ஒப்பிடப்பட்டன என்றார்.

அடுத்த கட்ட உத்தேசப் பணிகள் வருமாறு:டிஜிட்டல் மயமாக்குவதற்கும், சிறந்த முறையில் பகுப்பாய்வு செய்வதற்கும் ஏற்ற வகையில் மொபைல் செயலி பயன்பாட்டை அமல்படுத்துதல். உள்ளூரைச் சேர்ந்த தன்னார்வ இளைஞர்களின் உதவியுடன் மொபைல் செயலியின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது.ரத்தசோகை மற்றும் பலவீனம் போன்ற குறிப்பிட்ட நோய்களுக்கு உரிய பிரத்யேக மருந்து கண்டுபிடிப்புக்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல்

மருத்துவ முகாம்களின் ஒரு பகுதியாக நோயாளிகளை ஒழுங்கமைத்துக் கண்காணிப்பதுடன் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை மேற்கொள்ள ஊக்கப்படுத்துதல்.குறிப்பிட்ட நோய் அடிப்படையிலான கணக்கீடுகளை ஆய்வு செய்து உகந்த மருந்துகள் மற்றும் சிகிச்சையை வழங்கி மதிப்பீடு செய்தல்

கிராமின் ஆயுர்வேதிக் மொபைல் செயலி: இதுதவிர, பேராசிரியர் சி.லட்சுமண ராவ் தலைமையிலான இதே குழுவினர் 'கிராமின் ஆயுர்வேதா மொபைல் செயலி'யை உருவாக்கி உள்ளனர். இது ஒரு நபரின் ஒட்டுமொத்த சுகாதாரத் திட்டத்தை ஆண்ட்ராய்டு முறையில் புதுமையாக பயன்படுத்துவதாகும்.

ஆன்லைனில் மருத்துவர்களின் சந்திப்புக்கான நேரம் ஒதுக்கச் செய்தல், டிஜிட்டல் வடிவில் காப்புரிமை தரவைப் பராமரித்தல் ஆகியவற்றுக்கு இந்த மொபைல் செயலி பயன்படுவதுடன், நோயாளியின் உடல்நிலை மற்றும் சிகிச்சை பதிவுகளைக் கண்காணிக்கவும் உதவுகிறது. தேவைப்படும் பட்சத்தில் நோயாளிகளை வழக்கமான மறுபரிசோதனைக்கு நினைவூட்டலும் செய்யப்படும்.

இந்த ஸ்மார்ட் டூல் குறித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ் அப்ளைடு மெக்கானிக்ஸ் துறையின் பேராசிரியர் சி.லட்சுமண ராவ் கூறுகையில், "ஆயுர்வேதாவில் உள்ள முக்கிய அம்சங்களைப் புகுத்துவதால் கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என நம்புகிறோம். கிராமீன் ஆயுர்வேதா என்பது ஒவ்வொரு நாளும் நமது வீடுகளில் நாம் காணும் மூலிகைகள் பற்றிய அரிய தகவல்களுடன் உடல்நலம் குறித்த ஆலோசனைகளையும் வழங்குகிறது. நோயை அதன் வேர்களில் இருந்து குணமடைய இது உதவிகரமாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

Updated On: 18 Nov 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?