/* */

ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் : சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரசெயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்

HIGHLIGHTS

ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் : சுகாதார செயலாளர்  ராதாகிருஷ்ணன்
X

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 36 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

தற்போது சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள், ஊழியர்கள் என மொத்தம் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் அலுவலகங்கள் ,கல்வி நிறுவனங்களில் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாட்டு விதிகளை முழுமையாக பின்பற்ற உறுதி செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

வடமாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதால், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு சென்று வரும் மக்கள், அறிகுறிகள் ஏதாவது தென்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .

மாவட்ட அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை விகிதத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தேவையான மருத்துவ கட்டமைப்புகளை தயார் செய்து வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Updated On: 24 April 2022 4:39 PM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  5. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  6. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  7. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  8. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  9. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்