கொசு ஒழிப்பில் தீவிரம் காட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
Mosquito Control - பருவ மழை பெய்து வருவதால், தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
HIGHLIGHTS
Mosquito Control - மாவட்ட சுகாதார துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனுப்பிய சுற்றறிக்கை: தென்மேற்கு பருவ மழை யெ்வதால், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், மாவட்ட சுகாதார இயக்குநரகத்துக்கு தகவல் அளிப்பதை உறுதிபடுத்த வேண்டும். பிற மாவட்டங்கள் அல்லது அண்டை மாநிலங்களில் டெங்கு பரவல் அதிகமாக இருந்தால், அதுகுறித்த விவரங்களை மாவட்ட துணை சுகாதார இயக்குநருக்கு அனுப்ப வேண்டும்.
வீடுகள், பள்ளிகள், பூங்காக்கள், கல்லுாரிகள், பொது இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் தேங்காதவகையில் கழிவுகளை அப்புறப்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகித்தல், உணவுப் பொருட்கள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்தல், தனி நபர் சுகாதாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, கூறியுள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2